Published : 15 Dec 2021 12:28 PM
Last Updated : 15 Dec 2021 12:28 PM

நடமாடும் தேநீர் ஊர்திகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ரூ.3 கோடி மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழக அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ரூ. 3 கோடி மதிப்பீட்டிலான நடமாடும் தேநீர் ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தேயிலைத் தோட்ட நிறுவனம் , சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக நடமாடும் தேநீர் ஊர்திகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கென சுமார் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 20 நடமாடும் இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை சார்பில் சென்னையில் 10 ஊர்திகளும், திருப்பூரில் 3 ஊர்திகளும், ஈரோட்டில் 3 ஊர்திகளும், கோயம்புத்தூரில் 4 ஊர்திகளும் என மொத்தம் 20 தேநீர் ஊர்திகள் செயல்பட உள்ளன. கலப்படமற்ற, தரமான தேநீர் பொதுமக்களுக்குக் கிடைக்க இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x