Published : 13 Mar 2016 10:53 AM
Last Updated : 13 Mar 2016 10:53 AM

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க தீரன் சின்னமலை பேரவை முடிவு

மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் மாநில செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் கே.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அவிநாசி - அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம், மாநில பொதுச் செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை, அதிமுகவுக்கு ஆதரவளிக்கும். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஏதேனும் 2 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கித் தர, அதிமுக தலைமையிடம் கேட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x