Published : 25 Mar 2016 09:03 AM
Last Updated : 25 Mar 2016 09:03 AM
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ளது. விஜய காந்த் முதல்வர் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இதுவரை தமிழக தேர்தல் களத்தில் நீடித்த குழப்பம் நீங்கி தெளிவு பிறந்துள்ளது. அந்த வகையில் விஜயகாந்தின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. தேமுதிக இணைந்ததன் மூலம் ‘மக்கள் நலனை’ அந்தக் கூட்டணி பலி கொடுத்துள்ளது.
ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தோம். விஜயகாந்தை வேட்பாளராக அறிவிக்க தயங்கினோம் என்பது உண்மைதான். அதற்கான காரணங் களை இப்போது கூற முடியாது.
பாஜக கூட்டணியில் வேறு சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. அதுகுறித்து விரைவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடே கர் அறிவிப்பார். சரத்குமார் அதிமுக அணிக்கு சென்றதால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.
திமுகவும், அதிமுக வுக்கு மாற்று வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ள பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒருவகையில் இது ஆரோக்கியமான போட்டி. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முடிவின் தொடக்கம் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT