Published : 08 Mar 2016 08:46 AM
Last Updated : 08 Mar 2016 08:46 AM

அதிமுக அழைத்தால் ராதாரவி பிரச்சாரம்

அதிமுக தலைமை அழைத்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யத் தயார் என நடிகர் ராதாரவி தெரிவித்தார்.

பழநியில் நேற்று அவர் கூறியதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வளர்ச்சியை நான் பாராட்டுகிறேன். அவரது வளர்ச்சிக்குக் காரணம் அதிமுகதான். தேர்தல் காலத்தில் மேடை அமைப்பவர்கள், மைக் செட் அமைப்பவர்கள், கொடி, தோரணம் கட்டுபவர்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்குமோ, அதுபோன்ற முக்கியத்துவம்தான் விஜயகாந்துக்கும் உள்ளது. அதிமுக அழைத்தால் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளேன். இதனால் சரத்குமாருக்கு எனக்கும் இருக்கும் நட்பு பாதிக்கப்படாது. அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்து செயல்படுகிறார். நட்பு வேறு. அரசியல் வேறு.

திருமாவளவன் திராவிடக் கட்சிகளை ஒழிப்பேன் என்கிறார். மதிமுக திராவிடக் கட்சி இல்லையா. தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும். அப்போதுதான் அவற்றின் பலம் தெரியவரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x