Published : 18 Mar 2016 09:46 AM
Last Updated : 18 Mar 2016 09:46 AM
சிவாஜி சமூகநலப் பேரவையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் பேரவையின் மாநிலத் தலைவர் கே.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது :சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜிகணேசனின் சிலையை அகற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் காரணமாக நீதிமன்றம் சிலையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நிலை ஏற்பட்டது. அந்த சிலையை அதே இடத்திலோ அல்லது கடற்கரை சாலையில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு இடையிலோ அமைப்பதற்கு நடவடிக்கைகளை அடுத்து வரும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை தாமதமின்றி விரைவில் அமைக்க வேண்டும். சிவாஜியின் பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி கலை எழுச்சி நாளாக தமிழக அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்ற இந்த 3 கோரிக்கைகளையும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருவரும் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதனடிப்படையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்று சிவாஜி சமூகநலப் பேரவை முடிவெடுத்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT