கடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

வடகிழக்குப் பருவக் காற்றின்‌ காரணமாகக் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வடகிழக்குப் பருவக் காற்றின்‌ காரணமாக கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய மாவட்டங்களில்‌ பொதுவாக வறண்ட வானிலையும்‌, ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌. நாளை தமிழகம், புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in