தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக 10-ம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

11-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 12, 13-ம் தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in