‘அதிமுக கூட்டணியில் ஏப்.2-ல் தொகுதிப் பங்கீடு’

‘அதிமுக கூட்டணியில் ஏப்.2-ல் தொகுதிப் பங்கீடு’
Updated on
1 min read

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் சந்தித்து பேசினார். இதையடுத்து, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவில் உள்ள நால்வர் அணியினர் வேல்முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 11 தொகுதிகளை கேட்டு, அதற்கான பட்டியலையும் வேல்முருகன் அளித்தார். ஆனால் எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுதொடர்பாக வேல்முருகனிடம் கேட்டபோது, ‘‘11 தொகுதிக்கான பட்டியலை அதிமுக குழுவினரிடம் கொடுத்து இருக்கிறோம். இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், தொகுதிப் பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் 2-ம் தேதி எங்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விடும் என்று நம்புகிறோம். பாமகவைவிட பலம் மிக்கது எங்கள் கட்சி” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in