Published : 04 Mar 2016 09:21 AM
Last Updated : 04 Mar 2016 09:21 AM
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியில் அரசு அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியின் உத்தரவின் பேரில் குழந்தைகள் நலக் குழுமத்தினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட காப்பகத்தை மூடியதோடு, அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 35 சிறுவர்கள் மற்றும் 25 சிறுமிகளை மீட்டனர்.
காப்பக உரிமையாளர் தட்சிணாமூர்த்தியின் மீது செங்கல்பட்டு தாலுகா போலீஸில் புகார் அளித்தனர்.
மீட்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கின்றனர். இவர்களின் கல்வி பாதிக்காத வகையில் காப்பகங்களில் இருந்து மீட்டு வேறு காப்பகங்களில் தங்கவைத்துள்ளதாக குழுந்தைகள் நலக்குழும உறுப்பினர் ஜாகீர் முகம்மது தெரிவித்தார்.
அடுத்த 2 மாதங்களில் மாவட்டம் முழுவதும் குழுந்தைகள் காப்பகங்களில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT