

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் குடும்பத் தினருடன் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாம்பனைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்துள்ளது. மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை யும் விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் குடும்பத்தினருடன் நேற்று கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, ‘‘மீனவர்களை விடு தலை செய்யும் வரை பாம்பன், ராமேசுவரம் நாட்டுப்படகு மீனவர் கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். போராட்டத்தின் அடுத்த கட்ட மாக, பாம்பனில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெறும்” என அறிவித்தனர்.
பாம்பனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் பாம்பன், ராமேசுவரத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.