Published : 07 Dec 2021 09:18 PM
Last Updated : 07 Dec 2021 09:18 PM

ரூ.50,000 கரோனா இழப்பீட்டுத் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?- தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அரசு அறிவித்துள்ள ரூ.50,000 இழப்பீட்டை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பெறுவது எப்படி என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பின் விவரம் பின்வருமாறு:

தமிழ்நாடு அரசின் சார்பில் கரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ (what's new) பகுதியில் “Ex-Gratia for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x