Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM

மனம் உவந்து பெருமளவில் கொடிநாள் நிதி அளிப்போம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை

முப்படை வீரர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி வீச, மனம் உவந்து பெருமளவில் கொடிநாள் நிதி அளிப்போம் என்றுமுதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்ட செய்தி:

பெற்ற தாயையும், பெற்றெடுத்த செல்வங்களையும், உற்றமனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில்நிறுத்தும் திருநாள் கொடி நாள். நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் நின்று தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாட்டின் புகழை காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றுவதுடன், அவர்கள் குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அமைத்துத் தருவதும் நமது கடமையாகும்.

அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவீச, கொடி நாளின் கொடி விற்பனைக்கு மனம் உவந்துபெருமளவில் நிதி அளிப்போம். அந்த நிதி அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு வகையிலும் பயன்தரும்.

பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் தன்னலம் கருதாத அந்ததியாக வீரர்களுக்கான கொடி நாள் நிதிக்கு தொகை அளிப்பதில் தமிழகம் எப்போதும் தனி இடத்தைபெற்று வருகிறது.

எனவே, இந்த ஆண்டும் பெரும்அளவில் நிதி வழங்கி, முன்னாள்படை வீரர்களுக்கும் அவர்களதுகுடும்பத்தினருக்கும் நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x