Published : 31 Mar 2016 09:20 AM
Last Updated : 31 Mar 2016 09:20 AM
கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
கள் இறக்கவும், பருகவும் உலகில் எங்கும் தடையில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 29 ஆண்டுகளாக தடை நீடிக்கிறது. ‘புளிக்காத கள் சத்தான உணவு’ என்று 1937-ல் காந்தி கூறினார். ‘கள் ஒரு அருமருந்து என்பதால் கள்ளுக்கு கடையோ, தடையோ வேண்டாம்’ என்று 1963-ல் தந்தை பெரியார் வலியுறுத்தினார். அரசியல் கட்சியினருக்கு சவால் விடுகிறோம். நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளோம். கள்ளை உலகளவில் சந்தைப்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற, கள் (Neera) விற்பனையை அடுத்த மாதம் ஏப்ரல் 16-ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் தொடங்கவுள்ளோம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கள்ளுக்கான தடையை நீக்க அறிவிப்பு இடம்பெறாவிட்டால் வேட்பாளரை தோற்கடிப்போம் இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT