Published : 14 Mar 2016 09:59 AM
Last Updated : 14 Mar 2016 09:59 AM
சென்னை பெரவள்ளூரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு டாக்டர் சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
எல்ஐசி வீட்டுக் கடன் நிறுவ னத்தின் மண்டல மேலாளராக இருப்பவர் கருப்பையா. இவரது மூத்த மகள் சூர்யா எம்பிபிஎஸ் படித்து முடித்து மேல்படிப்புக்காக எம்எஸ் படிக்கவிருந்த நிலையில், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு எதிர் பாராதவிதமாக உயிரிழந்தார். அனைவருக்கும் உதவும் மனப் பான்மை கொண்ட சூர்யாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆதரவற்றோர்களுக்கு உதவிகள் செய்வது என குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து டாக்டர் சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக் கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் ஆதரவற்ற மாணவர்களுக்கும் முதியோர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி பெரவள்ளூரில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கவுன்சில் ஆப் சோஷியல் சர்வீஸ் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் முதி யோர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் காலணி உள் ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் எல்ஐசி எச்எப்எல் மண்டல மேலாளர் கருப்பையா, மகமாயி, கே.சந்திரா, திவ்யா, ஆறுமுகசாமி, கண்ணன் பாபு, அலெக்சாண்டர், கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர். உதவி களைப் பெற்றுக்கொண்டவர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT