Published : 29 Mar 2016 08:58 AM
Last Updated : 29 Mar 2016 08:58 AM

வதந்தி பரப்பும் திமுக: ராமதாஸ் குற்றச்சாட்டு

விழுப்புரம் அருகே காணை பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பாமக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் மதுவை கொடுத்து மக்களை கெடுத்ததால் திமுகவும், அதிமுகவும் இந்த தேர்தலில் ஓரங்கட்டப்பட உள்ளன. நாட்டில் சாராயம் ஒழிந்தால் வன்முறை, குற்றங்கள் எதுவுமே இருக்காது. கூட்டணிக்கு வந்தால் பாமகவுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாகவும், வலைவீசி வருவதாகவும் தற்போது சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர். இதை திமுகவே செய்து வருகிறது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அவர்கள் யார், யாரையோ அழைத்தும் வராததால் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

வதந்திகளை பரப்பினால் சும்மா இருக்க மாட்டோம். இந்தத் தேர்தல் அமைதியாக, நேர்மையாக நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x