Published : 28 Mar 2016 10:00 AM
Last Updated : 28 Mar 2016 10:00 AM
கோவையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:
எங்களுடன் இருந்த சில கட்சிகள், இன்று வேறு அணி களில் இணைந்துள்ளன. இத னால் அவர்களுக்குத்தான் நஷ்டமே ஒழிய, பாஜகவுக்கு இல்லை. விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த தால் அவர் மீது கோபமோ, விரோதமோ இல்லை. ஆட்சியி லிருக்கும் அதிமுகவையும், ஆட்சியமைக்கத் துடிக்கும் திமுகவை வீழ்த்த வேண்டும்.
தேமுதிகவுடன் பாஜக பேரம் பேசியதாக வைகோ பொறுப் பற்ற முறையில் பேசுவது முறை யல்ல; அது கற்பனையான அபத்தம்.
திராவிட இயக்கங்களின் ஆட்சிகளுக்கு முடிவு ஆரம்ப மாகியுள்ளது. ஏப்.4-ம் தேதி எஞ்சிய தொகுதிகளூக்கான வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT