Published : 04 Mar 2016 09:39 AM
Last Updated : 04 Mar 2016 09:39 AM

ஒவ்வொரு தொகுதிக்கும் 3 சோதனைச் சாவடிகள், 3 பறக்கும்படை ஏற்பாடு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும்படை, 3 சோதனைச் சாவடிகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமைக் கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரி வித்தார்.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், மாணவர்கள், வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியின் முடிவில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதும், ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள், 3 சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்களில் ஒரு கோடியே 34 லட்சம் பேர் தங்கள் கைபேசி எண்களை தேர்தல் துறையில் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர் கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும், போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும். இதை ஆணையமே மேற் கொள்ளும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x