செல்போன் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் வசதி

செல்போன் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் வசதி
Updated on
1 min read

ரயில்கள் புறப்படும் முன்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டுமென்றால் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். இணையதளம் மூலம் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும். ஆனால், கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் மீண்டும் கவுன்ட்டருக்கு சென்று விண்ணப்பித்து பணத்தை திருப்பப் பெற வேண்டும். இந்த நிலைதான் தற்போது இருக்கிறது.

இந்நிலையில், கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு செல்போன் மூலம் 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு டிக்கெட் ரத்து செய்யும் புதிய திட்டம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் முடிந்துள் ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறுவோர் அதை ரத்து செய்ய வசதியாக இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் பயணிகளின் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும். உடனடியாக செல்போன் மூலம் ரத்து செய்வதால், திரும்பப் பெறும் கட்டணமும் பெரிய அளவில் இழப்பில்லாமல் கிடைக்க வாய்ப்புள்ளது. 139 எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி முழுவிவரங்களையும் அளித்த பின்னர், உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒன் டைம் பாஸ்வோர்டு) வரும். இதை உறுதி செய்த பின்னர், டிக்கெட் ரத்தாகும். பயணிகள் காலம் தாமதிக்காமல் அதே தினத்திலேயே அருகில் உள்ள கவுன்ட்டருக்கு சென்று, பணத்தை பெற்றுக்கொள்ளலாம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in