Published : 01 Dec 2021 03:48 PM
Last Updated : 01 Dec 2021 03:48 PM

போக்சோ வழக்கில் கைதான டாக்டர் ரஜினிகாந்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கரூரில் போக்சோ வழக்கில் செய்யப்பட்ட டாக்டர் ரஜினிகாந்திற்கு நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு சிகிச்சை மருத்து வமனை டாக்டர் ரஜினிகாந்த் (55). மருத்துவமனை பெண் ஊழியரின் பிளஸ் 1 படிக்கும் 17 வயது மகளுக்கு கடந்த நவ. 13ம் தேதி பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதற்கு மேலாளர் சரணவன் (55) உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் கரூர் அனை த்து மகளிர் காவல் நிலைய போலீஸார் டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகிய இருவர் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் இரு பிரிவு களின் கீழ் கரூர் கடந்த நவ. 13ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் மேலாளர் சரவணனை கடந்த நவ. 14ம் தேதி கைது செய்த நிலையில் 16ம் தேதி இரவு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் டாக்டர் ரஜினிகாந்தை போலீஸார் கைது செய்தனர். கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டாக்டர் ரஜினிகாந்த்திற்கு 15 நாள் காவலில் வைக்க நீதிபதி நசீமாபானு உத்தரவிட்டதை அடுத்து கரூர் கிளை சிறையில் அடைந்தனர். அதன்பின் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

15 நாள் நீதிமன்ற காவல் நிறைவடையும் நிலையில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் டாக்டர் ரஜினிகாந்த் இன்று (டிச. 1ம் தேதி) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி நசீமாபானு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x