Published : 03 Mar 2016 09:01 AM
Last Updated : 03 Mar 2016 09:01 AM
மேலிடம் கேட்டுக் கொண்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை சாந்தோமில் நேற்று திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக இணைந்தால் பலமிக்க கூட்டணியாக இருக்கும். கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வருவது உறுதி. விரைவில் அவர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என பலர் விருப்ப மனு அளித்துள்ளனர். கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT