Published : 07 Mar 2016 09:42 AM
Last Updated : 07 Mar 2016 09:42 AM
காஞ்சிபுரம் நெசவாளர்களின் பிரச்சினைகள் குறித்து நெச வாளர் களுடன் அன்புமணி கலந்தாய்வு நடத்தினார். இதில் ஆரணி, காஞ்சி பட்டுசேலைகள் என முறைகேடாக விற்பனை செய்யப் படுவதாகவும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சாயம் போட முடியாத நிலையில் போதிய வருவாய் இல்லாமல் தவிப்பதாகவும் உற்பத்தியாளர்கள் கூறினர்.
தொழிலாளர்கள் தரப்பில் பேசும்போது, பட்டு ரகங்களுக்கு ஒரேமாதிரியான கூலியை நிர்ணயிப்பதில்லை. கூலி அட்டை வெளியிடாததால் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கவில்லை. பட்டுக்கூட்டுறவு சங்கங்களில் உண்மையான நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை மாறாக அரசியல் பிரமுகர்களின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது என கூறினர்.
பின்னர் பேசிய அன்புமணி, ‘நான் முதல்வரனால் நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்க்கையை மேம்படுத்துவேன்’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஓட்டுக்குப் பணம் அளிக்கும் கட்சிகள் மற்றும் வேட் பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு மட்டுமே பதிவு செய்கிறது. கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஓட்டுக்கு பணம் அளித்தது உறுதிபடுத்தப்படும் கட்சிகளின் வேட்பாளரை நீக்கி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT