Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM
சிவகாசி அருகே உள்ள சித்து ராஜபுரத்தைச் சேர்ந்தவர் சேசுதாஸ் (39). இவரது மகன் மைக்கேல் அஜய் (9). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 26-ம் தேதி காலை வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சேசுதாஸ் சிவகாசி டவுன் காவல் நிலையத் தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிந்து மைக்கேல் அஜையை தேடி வந்தனர்.இந்நிலையில் சித்துராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் சிறுவன் மைக்கேல்அஜய் உடல் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது. குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்ததாக முதலில் கூறப்பட்டது.
பின்னர், மைக்கேல்அஜயுடன் சென்ற 13 வயது சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி னர்.
அப்போது அந்த சிறுவன் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினான். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் மைக்கேல் அஜய்யுடன் பிடிபட்ட சிறுவன் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. தொடர் விசாரணையில், பிடிபட்ட 13 வயது சிறுவன் மைக்கேல் அஜய்யை கொலை செய்தது தெரியவந்தது. அச்சிறுவனை போலீஸார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT