Published : 23 Mar 2016 08:22 PM
Last Updated : 23 Mar 2016 08:22 PM

ராகிங்கை தடுக்க கடும் நடவடிக்கை தேவை: யுஜிசி உத்தரவு

ராகிங்கை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலாளர் ஜஸ்பால் எஸ்.சாந்து அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, ராகிங் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் யுஜிசி விதிமுறைகளை வரையறுத்துள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

ராகிங் தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் தேசிய அளவில் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் வசதி (1800-180-5522) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராகிங் கொடுமையாக்கு ஆளாகும் மாணவ-மாணவிகள் இந்த எண்ணுக்கு புகார் செய்யலாம்.

குற்றச்செயலாக கருதப்படும் ராகிங்கை தடுத்துநிறுத்த உயர்முன்னுரிமை அளிப்பதுடன் ராக்கிங் விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகிங் தொடர்பாக மாணவ-மாணவிகள் குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்கள், ஓபிசி மாணவர்களின் புகார்களை பதிவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x