Published : 04 Mar 2016 09:57 AM
Last Updated : 04 Mar 2016 09:57 AM

பிரச்சாரத்துக்கு தயார்: கஞ்சா கருப்பு அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் அய்யனார் கோயிலில் தமிழகத்திலேயே அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள குதிரை சிலை அருகே சண்டிக்குதிரை எனும் திரைப்படத்துக்கான காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன.

அப்போது நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘மற்ற நடிகர்களைப்போல தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. ஆனால், யாரும் என்னை அழைக்கவில்லை. நான் அந்த அளவுக்கு பெரிய ஆளாக இல்லையோ என்னவோ. எந்தக் கட்சியினர் அழைத்தாலும் சரி, தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல நான் தயார்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x