Published : 30 Mar 2016 07:54 PM
Last Updated : 30 Mar 2016 07:54 PM

ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு செயலிழந்துவிட்டது: பிரேமலதா

ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு செயலிழந்துவிட்டது என்று தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

திருச்சி மாவட்டம் உறையூரில் இன்று தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தேர்தல் அறிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை கொலை செய்த குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு செயலிழந்துவிட்டது; சீர்கெட்டுவிட்டது என்பதற்கு திருச்சியை விட மிகப் பெரிய சான்று எங்கும் இல்லை.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x