Published : 26 Nov 2021 12:46 PM
Last Updated : 26 Nov 2021 12:46 PM

நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் தொழிலாளர்கள் போராட்டம்: ரூ.200 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்

நூல் விலை உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாகத் திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாகப் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.120 முதல் ரூ.150 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பின்னலாடைத் தொழில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அரசுக்குப் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்றைய தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த 117 அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டம் அறிவித்து இருந்தன.

இதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை மற்றும் அதுசார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ரூ.200 கோடிக்கு மேல் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x