Published : 24 Nov 2021 06:11 PM
Last Updated : 24 Nov 2021 06:11 PM

நாளை எந்தந்த விரைவு ரயில் சேவைகள் நிறுத்தம்? :தெற்கு ரயில்வே நிர்வாகம்

கோப்புப் படம்

சென்னை

பல்வேறு ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக நாளை விரைவு சேவைகளை ரத்து செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"வெளி மாநிலங்களை இணைக்கு இருப்பு பாதையில் பல்வேறு பராமரிப்பு பணி காரணமாக 25 நவம்பர் 2021 அன்று நாளை இரு மார்கத்திற்கான எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் எண் 15905 - கன்னியாகுமரி - திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் 25 நவம்பர் 2021 அன்று கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்த ரயில், ரயில் எண் 22648 - கொச்சுவேலி - கோர்பா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 25 நவம்பர் 2021 அன்று நாளை கொச்சுவேலியில் இருந்து காலை 06:15 மணிக்குப் புறப்பட இருந்த ரயில்,

ரயில் எண் 13352 - ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் 25 நவம்பர் 2021 அன்று ஆலப்புழாவில் இருந்து காலை 06:00 மணிக்குப் புறப்பட இருந்த ரயில். ரயில் எண் 22641 - திருவனந்தபுரம் - ஷாலிமார் இருவார விரைவு வண்டி 25 நவம்பர் 2021 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.55 மணிக்குப் புறப்பட இருந்த ரயில்,

ரயில் எண் 22631 - மதுரை - பிகானேர் அனுவ்ரத் ஏசி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 25 நவம்பர் 2021 அன்று மதுரையில் இருந்து காலை 11:55 மணிக்குப் புறப்பட இருந்த ரயில் என குறிப்பிடப்பட்ட அணைத்து ரயில் சேவைகளுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x