Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

50 ஆயிரம் இடங்களில் இன்று 10-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம்

சென்னை

தமிழகம் முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 10-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “தமிழகத்தில் 10-வது கரோனா தடுப்பூசிமுகாம் 50 ஆயிரம் இடங்களில்இன்று நடைபெறுகிறது. 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, காலஅவகாசம் முடிந்தும் 71 லட்சம் பேர் 2-ம்தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். இந்தமுகாமைப் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகாமில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x