மெரினாவில் போராட்டம் நடத்த முயன்றால் நடவடிக்கை: போலீஸார் எச்சரிக்கை

மெரினாவில் போராட்டம் நடத்த முயன்றால் நடவடிக்கை: போலீஸார் எச்சரிக்கை
Updated on
1 min read

மெரினாவில் போராட்டம் நடத்தமுயன்றால், கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

ஆன்லைனில் பருவத் தேர்வுகளை நடத்தக் கோரி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மாணவப் பிரதிநிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், கல்லூரி தேர்வுகள் ஜனவரி 20-ம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதை மாணவப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி மெரினா கடற்கரையில் சிலர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அறிந்த காவல் துறையினர், “மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தும் நோக்கத்துடன் யாராவது வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்” என்று எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in