Published : 30 Mar 2016 07:32 AM
Last Updated : 30 Mar 2016 07:32 AM
திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதைத் தொடர்ந்து மேலிடத் தலைவர்களுடன் விவாதிப்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை காங் கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கடந்த 25-ம் தேதி சந்தித்துப் பேசினார். அந்த சந்திப் பின்போது காங்கிரஸ் கட்சி தரப்பில் 2011-ல் ஒதுக்கிய 63 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால் 25 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. இதனால் எந்த முடிவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட் டங்களுக்கு தலா 1 தொகுதி வீதம் காங்கிரஸ் கட்சிக்கு 32 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப் படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் ஆகியோருடன் விவாதிப் பதற்காக இளங்கோவன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென் றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT