Published : 30 Mar 2016 11:43 AM
Last Updated : 30 Mar 2016 11:43 AM
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும் பொறுப்பேற்பார்கள் என தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதிஷ் கூறியுள்ளார்.
கோவில்பட்டியில், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சுதிஷ், "மே 23ம் தேதி தமிழகத்தில் முதலமைச்சராக கேப்டன் பதிவியேற்கின்ற நாள். துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும் பொறுப்பேற்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளாட்சி மற்றும் நிதியமைச்சர் பொறுப்பு அளிக்கப்படும். நீங்கள் (மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்) கேப்டனை முதலமைச்சர் என்று சொல்லும் போது நான் இதையும் சொல்லியே ஆகவேண்டும்" என்றார்.
மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக இணைந்து இத்தேர்தலை சந்திக்கிறது. தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT