ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: நவ.21ஆம் தேதி நடக்கிறது

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: நவ.21ஆம் தேதி நடக்கிறது
Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இதுகுறித்துத் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நாளை மறுநாள் (21-11-2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து, நீட் தேர்வு விவகாரம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், கரோனா நிலவரம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், திமுகவின் நிலைப்பாடுகள் குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in