Published : 24 Mar 2016 12:54 PM
Last Updated : 24 Mar 2016 12:54 PM

ஊழல் திமுக, அதிமுகவை அகற்றுவோம்: நல்லகண்ணு

ஊழல் நிறைந்த திமுக, அதிமுகவை தமிழகத்திலிருந்து அகற்றுவதே மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக அணியின் இலக்கு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக இணைப்பு வரவேற்கத்தக்கது. பொது எதிரியாக காங்கிரஸ், பாஜகவை ஒழிக்க வேண்டும்; தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஊழல் ஆட்சி செய்த திமுக, அதிமுகவை அகற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, அதிகாரிகள் தற்கொலை, விவசாயிகள் தற்கொலை, ஆணவக் கொலைகள் என குற்றமும், அவலமும் நிறைந்துள்ளது. இவற்றை சீரமைக்க அதிமுகவை அப்புறப்படுத்த வேண்டும். திமுகவும் தனது ஆட்சியின்போது இதே அவலங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது. திமுக, அதிமுக அல்லாது மாற்று ஆட்சிக்கு எங்கள் கூட்டணி வித்திடும்.

முழு மதுவிலக்கு அமலாக வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x