நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது: ஏப். 18 வரை சிறையில் அடைக்க உத்தரவு

நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது: ஏப். 18 வரை சிறையில் அடைக்க உத்தரவு
Updated on
1 min read

மதுரையில் நாளிதழ் அலுவல கத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்த வழக்கில் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் மேலும் இருவரை சிபிஐ போலீஸார் கைது செய் தனர். அவர்களை ஏப்ரல் 18-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையில் உள்ள ஒரு நாளி தழ் அலுவலகம் மீது 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசியதில் ஊழியர்கள் வினோத், கோபி நாத், பாதுகாவலர் முத்துராமலிங் கம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அட்டாக்பாண்டி உட்பட 17 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களை 9.12.2009-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் சிபிஐ தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை இழுத்தடித்ததால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் திருச்செல்வம், சரவணமுத்து, முருகன், கந்தசாமி, ரமேஷ்பாண்டி, ரமேஷ்பாண்டியன், வழிவிட்டான், தயாமுத்து, சுதாகர், திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கவும், அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் கடந்த பிப்.5-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சரவணமுத்து, சுதாகர், மாலிக் பாட்சா ஆகி யோரை சிபிஐ போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரூபன், வேறொரு வழக்கில் சேலம் சிறையில் இருப்பதால், நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க சேலம் சிறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் இருந்த ரூபனையும், வழக்கில் தொடர் புடைய கந்தசாமி என்பவரையும் சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சரவண முத்து, சுதாகர், மாலிக்பாட்சா, கந்தசாமி, ரூபன் ஆகியோரை நீதிபதிகள் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர்.

சிபிஐ வழக்கறிஞர் நாகேந் திரன் வாதிடும்போது, ‘பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். 11-வது எதிரி தயாமுத்து மலேசியாவில் உள் ளார். அவரையும், எஞ்சிய 6 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றார். இதையடுத்து விசாரணையை ஏப்.18-ம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை 5 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், ரூபனை கோவை சிறைக்கும், சரவணமுத்து உட்பட 4 பேரையும் மதுரை சிறைக்கும் பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in