Published : 23 Mar 2016 08:03 PM
Last Updated : 23 Mar 2016 08:03 PM
தமிழகத்தை டெண்டர் எடுக்க அதிமுகவும் திமுகவும் போட்டி போடுவதாக பாமக எம்எல்ஏ காடுவெட்டி குரு குற்றஞ்சாட்டினார்.
ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய பாமக சார்பில் வரைவு வாக்காளர் தேர்தல் அறிக்கை விளக்கக்கூட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில் பாமக எம்ஏல்ஏ காடுவெட்டி குரு பேசியதாவது:
கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகின்றன.
எந்த சாதனையும் சொல்லும் அளவுக்கு இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தை டெண்டர் எடுக்க அதிமுக திமுகவும் போட்டி போடுகின்றன. தேமுதிக கூட்டணிக்காக கருணாநிதி காத்திருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் விவசாயம் வளர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் விவசாயம் மட்டுமல்ல. எந்தத் தொழிலும் வளர்ச்சி பெறவில்லை. பாமக மட்டுமே தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். பாமக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT