

டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப் பாட்டு அறை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் விரை வில் நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்ப தற்கான பணிகளில் தமிழக காவல் துறை ஈடுபட்டுள்ளது. வருகிற மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க டிஜிபி அலுவலகத்தில் தனியாக தேர்தல் கட்டுப் பாட்டு அறை அமைப்பது வழக்கம். ஒரு ஐஜி தலைமையில், ஒரு எஸ்பி, 2 கூடுதல் எஸ்பிக்கள், 2 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவார்கள். இது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடத்தி முடிக்கப் பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பின்னர், தேர்தல் டிஜிபி ஒருவரை யும் தேர்தல் ஆணையம் நியமிக்கும். அதன் பின்னரே தேர்தல் கட்டுப்பாட்டு அறை முழுமையாக செயல் பட தொடங்கும்.
வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை, பதற்றமான வாக்குச்சாவடிகள், பாது காப்பு பணிக்கு எவ்வளவு போலீஸார் தேவை, மத்திய துணை ராணுவப்படை, மாநில போலீஸார், ஊர்க்காவல் படை, இளைஞர் காவல் படை போன்ற பிரிவு களை எங்கெங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது போன்றவை குறித்து முடிவு செய்துவிட்டோம்.
234 தொகுதிகளிலும் உள்ள பதட்ட மான வாக்குச்சாவடிகள் குறித்து கணக் கெடுக்கும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச் சாவடிகள் பட்டியலும் விரைவில் வெளி யாகிவிடும். ஓட்டுக்கு பணம் கொடுப் பதைத் தடுக்க, கள்ள ஓட்டு போடுபவர் களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப் படும்.
இதுகுறித்து இப்போதுதான் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்" என்றார்.