Published : 12 Nov 2021 06:55 PM
Last Updated : 12 Nov 2021 06:55 PM

சென்னையில் நவ.14-ம் தேதி இலவசக் கண்‌ பரிசோதனை முகாம்‌

சென்னை

கட்டுமானத்‌ தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட சிறு மற்றும்‌ குறு தொழிலாளர்களுக்கான இலவசக் கண்‌ பரிசோதனை முகாம்‌ நவம்பர்‌ 14-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக, முகாமை நடத்தும் சங்கர நேத்ராலயா ஆக்குபேஷனல்‌ ஆப்டோமெட்ரி சர்வீஸ்‌ மற்றும்‌ கம்ப்யூட்டர்‌ ஏஜ்‌ மேனேஜ்மென்ட்‌ சர்வீஸ்‌ இணைந்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''ஆட்டோ / கார்‌ ஓட்டுநர்கள்‌, ஆட்டோமொபைல்‌ மெக்கானிக்குகள், கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌, வெல்டர்கள்‌, முடிதிருத்தும்‌ நிபுணர்கள்‌, நடைபாதை வியாபாரிகள்‌, செக்யூரிட்டி, மீனவர்கள்‌ ஆகிய சிறு மற்றும்‌ குறு தொழிலாளர்களுக்கான இலவசக் கண்‌ பரிசோதனை முகாம்‌, நவம்பர்‌ 14-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண்‌ மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல்‌ மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்துகொள்ளத் தகுதியுடையவர்கள் ஆதார்‌ அட்டை மற்றும்‌ வேலைக்கான ஆதாரத்தைக் கொண்டு வரவேண்டும்‌.

தொலைபேசி அழைப்பின்‌ மூலம்‌ 2021 நவம்பர்‌ 13 (சனிக்கிழமை) அன்று, அல்லது அதற்கு முன்பாக‌ (காலை 10 மணி முதல்‌ மாலை 4 மணிக்குள்‌) முன்பதிவு செய்யவேண்டும்‌. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள்‌ வருகையை உறுதி செய்ய வேண்டும்‌.

கூடுதல் தகவல்களுக்கு: 95000 62027 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்''.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x