Published : 30 Mar 2016 08:07 AM
Last Updated : 30 Mar 2016 08:07 AM

அதிமுக 2 தொகுதி ஒதுக்கும்: சேதுராமன் நம்பிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அண்மையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலரை அழைத்து பேசினார். கடந்த தேர்தலில் அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட சில கட்சிகளை இன்னும் அழைத்துப் பேசவில்லை.

இது தொடர்பாக, மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: நாங்கள் இப்போதும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள மணப்பாறை, திருச்சி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, தென்காசி, ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது 5 தொகுதிகளை கேட்டுள்ளோம். இதில் குறைந்தபட்சம் 2 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். வெள்ளிக்கிழமைக்குள் ஜெயலலிதா எங்களை அழைத்துப் பேசுவார் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x