Published : 12 Nov 2021 08:35 AM
Last Updated : 12 Nov 2021 08:35 AM

கனமழை காரணமாக இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத் தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே மழை பெய்துவந்தது.

கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், இன்னும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற விவரங்களைப் பார்ப்போம்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கன்னியாகுமரி, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், திருப்பத்தூரில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x