Published : 23 Mar 2016 07:56 PM
Last Updated : 23 Mar 2016 07:56 PM
சரிந்த செல்வாக்கை தூக்கி நிறுத்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூரில் திமுக மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இதில், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தேமுதிகவுடன் கூட்டணி குறித்து கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு மேல் கருத்து சொல்லும் பழக்கம் திமுகவில் இல்லை. கருணாநிதி சொல்லிவிட்டால் அதுதான் இறுதியானது. முல்லை பெரியாறு அணையை பார்வையிடச் சென்ற தமிழக அதிகாரிகள் மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்ததாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் மீது எந்த நேரத்திலும் வழக்கு பாயும் என்ற நிலை இருக்கிறது.
அமைச்சர்கள் 5 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்று தெரியாமலா ஜெயலலிதா இருந்திருப் பார். அவரது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸாரும் உளவுத் துறையினரும் இப்போதுதான் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு களைக் கண்டுபிடித்துச் சொல்கிறார் கள். இது எல்லாம் கண் துடைப்பு நாடகம். சரிந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தவே அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT