Published : 29 Mar 2016 07:12 PM
Last Updated : 29 Mar 2016 07:12 PM

திமுக கூட்டணியில் சமூக சமத்துவப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் சமூக சமத்துவப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக சமத்துவப்படை கட்சியின் தலைவர் சிவகாமி இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் சமூக சமத்துவப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் சமூக சமத்துவப் படை கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எந்த தொகுதி என்பது தோழமைக் கட்சிகளோடு பேசி முடிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x