Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM
தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:
தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (நவ.8) தொடங்கி நவம்பர் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நவ.8, 9-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தமிழ், ஆங்கிலம் பாடத் தேர்வுகள் ஏற்கெனவே தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.
இந்நிலையில், வரும்நாட்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நவ.10, 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறவுள்ள கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் தேர்வுகளும் தற்போது தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கான புதிய மாற்று காலஅட்டவணை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT