Published : 16 Mar 2016 09:15 AM
Last Updated : 16 Mar 2016 09:15 AM
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை யில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது: கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 81-வது ஆணவக் கொலை நடந்துள்ளது. இந்த கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றுவது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட் டத்தில் தெரிவித்துள்ளோம். இதுபோன்ற சமூகக் கொடுமைகளை தடுக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சி களும் இதுவரை கருத்து சொன்ன தாகத் தெரியவில்லை. கிரானைட் முறைகேடுகள், ஆணவக் கொலைகள் விவகாரங்களில் அதிமுக, திமுக இடையே ‘நீயும் பேசாதே; நானும் பேசலை’ என்ற எழுதப்படாத ஒப்பந் தம் உள்ளதோ என சந்தேகம் உள்ளது. இவ்வாறு ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT