Published : 08 Nov 2021 01:30 PM
Last Updated : 08 Nov 2021 01:30 PM

பருவமழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா: 10 முக்கிய நடவடிக்கைகள்

சென்னை

பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகம் 10 முக்கிய நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் பருவமழை எச்சரிக்கை மற்றும் கனமழை கணிப்பைத் தொடர்ந்து, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநரால், துணை இயக்குநர், வனச்சரக அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்கள் ஆகியோருடன் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவமழையின்போது எதிர்பார்க்கப்படும் அவசர நிலைகள், உயிரியல் பூங்கா வளாகத்தில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பின்வரும் தயார்நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 முக்கிய நடவடிக்கைகள்:

• அடைப்புகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை மின்சாரம் நிறுத்தப்படும்போது பம்ப் செய்ய ஜெனரேட்டர்கள், ஆயில் என்ஜின்கள்/ மோட்டார்கள் போன்ற அத்தியாவசிய இயந்திரங்கள் தடையின்றிச் செயல்படுவதை உறுதி செய்தல்.

• விழுந்த மரங்களை அகற்றுவதற்குத் தேவையான மின் அறுவை, கை அறுவை இயந்திரம் மற்றும் பிற கருவிகள் மற்றும் உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்தல்.

• சங்கிலி இணைப்பு, கயிறுகள், வலைகள், நிழல் வலைகள், கூரைத் தாள்கள் ஆகியவை சுவர்கள் மற்றும் அடைப்புகளில் சேதம் ஏற்பட்டால் பயன்படுத்தப்பட வேண்டும்.

• போதுமான எண்ணிக்கையிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் டார்ச் விளக்குகளுடன் மீட்பு உபகரணங்களுடன் மீட்புப் பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல்.

• உணவு விநியோகத்தில் இடையூறு ஏற்படும் பட்சத்தில் வன உயரினங்களுக்குத் தேவையான தீவனப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை முன்கூட்டியே சேகரம் செய்து வைத்தல்.

• மழை நீர் அதிகமாகப் பாய்ந்தால் தேவையான இடங்களில் மழை நீரைத் திருப்பிவிட மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைத்திருத்தல்.

• களப் பணியாளர்களுக்கான முதலுதவி மருந்துகளையும், வனவிலங்குகளுக்கான அத்தியாவசிய மற்றும் அவசரகால மருந்துகளையும் முன்கூட்டியே வாங்குதல்.

• ஜேசிபி போன்ற கனரக வாகனங்கள், ஆட்கள் மற்றும் போதுமான எரிபொருளுடன் பொருட்களைக் கொண்டு செல்ல அனைத்து வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும்.

• மழை நீரின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்வதற்காக இயற்கையான கால்வாய்களின் தெளிவான வடிகால்களைப் பராமரித்தல்.

• உயிரியல் பூங்காவின் வன உயிரின மருத்துவர்களால் விலங்குகளின் ஆரோக்கியத்தை 24 மணி நேரமும் கண்காணிப்பதை உறுதி செய்தல்.

விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், தேவையான உடனடி தீர்வு/ சரிசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் துணை இயக்குநர் மற்றும் வனச்சரக அலுவலர்கள் அடங்கிய மழைக்கால கண்காணிப்புக் குழுவையும் இயக்குநர் அமைத்துள்ளார்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x