மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிடுக: திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிடுக: திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
Updated on
1 min read

திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக பணியாற்றிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன்.

அமைச்சர் பெருமக்களும் இதுபோன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி - மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in