Published : 11 Mar 2016 08:11 AM
Last Updated : 11 Mar 2016 08:11 AM
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்புகள் அதி கரித்துள்ளன. திமுக, பாஜக கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்ட ணியும் தேமுதிகவை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. தேமுதிக எந்தப் பக்கம் போகும் என அறிந்து செயல்பட அதிமுக தரப்பும் காத் திருக்கிறது. ஒருவேளை திமுக பக்கம் தேமுதிக சென்றால், தமாகா, மமக உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் சேர்க்கவும், அவற் றுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை பிரித்தளித்துவிட்டு, 200 தொகு திகளில் போட்டியிடவும் அதிமுக தீர் மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் ஜெய லலிதா, தனது முதல்கட்ட பிரச் சாரத்தை இப்போதே தொடங்க முடிவெடுத்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏதுவாக முக்கிய தொகுதி களுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (11-ம் தேதி) வெளியிடுவார் என்று கட்சி யினர் எதிர்பார்க்கின்றனர். குறிப் பாக, சென்னையில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் களை அறிவிக்கக்கூடும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள் ளது. இதையடுத்து, முதல்கட்ட பிரச்சாரத்தை ஆர்.கே.நகரில் 17-ம் தேதி தொடங்குவார் என்று கூறப் படுகிறது. தொடர்ந்து, சென் னையின் இதரபகுதிகளில் அடுத்த டுத்து பிரச்சாரம் செய்யும் ஜெய லலிதா, மற்ற மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று பிரச் சாரம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT