Published : 06 Nov 2021 09:08 PM
Last Updated : 06 Nov 2021 09:08 PM

தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலராக அமுதா ஐஏஎஸ் நியமனம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அவர்களின் துறை, பதவி விவரம் வருமாறு:

1. ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ்
2.போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கோபால் ஐஏஎஸ்
3.நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஐஏஎஸ்
4.நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்
5.தொழிற்துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன் ஐஏஎஸ்
6.பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா ஐஏஎஸ்
7.எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஐஏஎஸ்
8.கைத்தறித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ்
9.இளைஞர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா ஐஏஎஸ்
10.நிலநிர்வாகத் துறை முதன்மை ஆணையர் பீலா ராஜேஷ் ஐஏஎஸ்

இவர்களில், பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐஏஎஸ் தனது பதவிக்காலத்தை பாதியிலேயே முடித்து கொண்டு மீண்டும் தமிழகம் திரும்பினார். இதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில் அவர் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x