Published : 16 Mar 2016 09:10 AM
Last Updated : 16 Mar 2016 09:10 AM

கருணாநிதிக்கு இனி சறுக்கல்தான்: வைகோ கணிப்பு

மதிமுக மாநில இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க நேற்று திண்டுக்கல் வந்த வைகோ கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,462 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான இந்த அரசு அகற்றப்பட வேண்டும்.

மணல் கொள்ளை, மது ஆகிய இரண்டுக்கும் திமுக, அதிமுகதான் காரணம். மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத, மது இல்லாத, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம். தேமுதிக கூட்டணிக்கு வரும் என அவரைச் சுற்றி இருப்பவர்கள் கருணாநிதியை ஏமாற்றி விட்டனர். அவரும் அவர்கள் சொன்னதை நம்பி பழம் கனிந்து வருகிறது. நழுவி பாலில் விழும் என்றெல்லாம் சொன்னார். கருணாநிதி ஒரு ராஜதந்திரி. அவரை தவறாக வழிநடத்துகின்றனர். குடும்ப பாசத்தில் அவர் சறுக்கிவிட்டார். இனி தொடர்ந்து அவருக்கு சறுக்கல்தான். மக்கள் நலக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்தவுடன் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு மட்டும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x