Published : 03 Nov 2021 02:09 PM
Last Updated : 03 Nov 2021 02:09 PM

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்வர்‌ ஸ்டாலின் வழங்கினார்

சென்னை

கோவிட்-19 பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகையைத் தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கோவிட் பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 24,908 மருத்துவ அலுவலர்கள், 26,615 செவிலியர்கள், 6,791 சுகாதார ஆய்வாளர்கள், 8,658 கிராம சுகாதார செவிலியர்கள், 6,083 ஆய்வகத் தொழில் நுட்பனர்கள் மற்றும் 32,113 இதர பணியாளர்கள் என மொத்தம் 1,05,168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிடும் அடையாளமாக, 13 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.

கோவிட்-19 பெருந்தொற்று தடுப்புப் பணிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையைச் சார்ந்த 34,396 நபர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையைச் சார்ந்த 13,371 நபர்கள், மருத்துவக் கல்வித் துறையைச் சார்ந்த 49,908 நபர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையைச் சார்ந்த 270 நபர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) துறையைச் சார்ந்த 962 நபர்கள், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தைச் சார்ந்த 6,261 நபர்கள், என மொத்தம் 1,05,168 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

2021 ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அரசுப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறைக்கு 65 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு 28 கோடியே 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய், மருத்துவக்கல்வி துறைக்கு 91 கோடியே 69 லட்சத்து 65 ஆயிரத்து 962 ரூபாய், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு 55 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) 1 கோடியே 96 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்கு 9 கோடியே 39 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1,05,168 பணியாளர்களுக்கு 196 கோடியே 91 லட்சத்து 65 ஆயிரத்து 962 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு 26.10.2021 அன்று அரசாணை வெளியிட்டது.

அதன்படி, கோவிட் பெருந்தொற்றுப் பணியில் பணிபுரிந்த 1,05,168 பணியாளர்களுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலையை முதல்வர் இன்று வழங்கி தொடங்கி வைத்தார்'‌'.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x