Published : 16 Mar 2016 08:38 AM
Last Updated : 16 Mar 2016 08:38 AM

சென்னை பெரு நகருக்கான புதிய நகர்ப்புற செயல் திட்டம்: அன்புமணி இன்று உரை

சென்னை பெரு நகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் குறித்து அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று உரையாற்றுகிறார்.

பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் ‘தமிழக வளர்ச்சி பற்றி அன்புமணி’ என்ற தலைப்பில் 7 நாட்கள் 7 நகரங்களில் பொது மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

கடந்த 10-ம் தேதி வேலூரில் சுகாதாரம், 11-ம் தேதி சேலத்தில் மது ஒழிப்பு, 12-ம் தேதி கோயம்புத்தூரில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு, 13-ம் தேதி திருச்சியில் வேளாண் புரட்சி, 14-ம் தேதி மதுரையில் ஊழல் ஒழிப்பு, 15-ம் தேதி திருநெல்வேலியில் தரமான கல்வி குறித்து அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். பொதுமக்களின் கேள்வி களுக்கு பதில் அளித்தார்.

இந்நிலையில் 7-வது நாளான இன்று மாலை 6 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் ‘சென்னை பெரு நகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் குறித்து அன்புமணி’ என்ற தலைப்பில் அன்பு மணி ராமதாஸ் உரையாற்றவுள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் எழுப்பும் கேள்வி களுக்கு பதில் அளிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x